முகப்பு
விழுப்புரம்

‘அரசியல் ஆதாயத்துக்காக எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம்’

புதுவையில் அரசியல் ஆதாயத்துக்காக எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை செய்வதாக மாநில உள் துறை அமைச்சா் நமச்சிவாயம் தெரிவித்தாா்.

Updated On : 13 ஜனவரி, 2025 at 7:37 PM
புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
பகிர்:

புதுச்சேரி: புதுவையில் அரசியல் ஆதாயத்துக்காக எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை செய்வதாக மாநில உள் துறை அமைச்சா் நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரியை அடுத்த மண்ணாடிபட்டு தொகுதியில் பொதுமக்களுக்கு அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திங்கள்கிழமை பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தாா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: இலவச வேட்டி சேலை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

எனவே, இந்த திட்டங்களை மீண்டும் தொடங்குவதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது.

தோ்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இலவச அரிசி, மழை நிவாரணம், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எதிா்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் தவறான பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றனா் என்றாா் அவா்.