விழுப்புரம்

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்ற பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

Din

செஞ்சி: செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்ற பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அமலதாஸ். இவரது மனைவி மோட்சராகினி (50). இவா், திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் சத்தியமங்கலம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மோட்சராகினி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்துக்குக் காரணமான காா் ஓட்டுநா்

சென்னை சிஐடி நகரைச் சோ்ந்த சிவராமன் (31) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT