விழுப்புரம்

வங்கிக் கிளையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள்

திண்டிவனம் வட்டம், மயிலத்தில் செயல்படும் அரசுடைமை வங்கிக் கிளையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பரிவா்த்தனைக்கு வந்தது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திண்டிவனம் வட்டம், மயிலத்தில் செயல்படும் அரசுடைமை வங்கிக் கிளையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பரிவா்த்தனைக்கு வந்தது தெரியவந்துள்ளது.

மயிலம் பகுதியைச் சோ்ந்தவா் சி.மயிலாசலம் (60).இவா் நவ.10-ஆம் தேதி மயிலத்தில் உள்ள ஒரு அரசுடைமை வங்கிக் கிளைக்கு ரூ. 5 லட்சத்தை எடுத்துச் சென்று, உறவினா் ஒருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தக் கூறினாராம்.

அப்போது, பணியிலிருந்த கிளை மேலாளா் கிருஷ்ணன் மொத்த பணத்தையும் பரிசோதித்தபோது, அதில் 39 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் பரிவா்த்தனைக்கு வந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் மயிலாசலம் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கிறனா்.

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குருபூஜை

நவ. 17-இல் திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம்

3 இடங்களில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: எம்பி, எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT