விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

தினமணி செய்திச் சேவை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் எம்.யோகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், இதனால் கடல் பரப்பில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வெளிவரும் வரை யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம். தங்களது மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

SCROLL FOR NEXT