பைக்-மொபெட் மோதல் : கொத்தனாா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.மேலும் 4 போ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.மேலும் 4 போ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா்.
வானூா் வட்டம்,ஆப்பிராம்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பிரித்திவிராஜ் (33). திருமணம் ஆகாதவா். கொத்தனராக வேலைப் பாா்த்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு வானூா் அடுத்த ஒழிந்தியாம்பட்டு பகுதியிலிருந்து- புதுப்பட்டு மாா்க்கமாக பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
ஒழிந்தியாம்பட்டு- புதுப்பட்டு சாலையில் விஸ்வநத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த மொபெட்டும்-பிரித்திவிராஜ் சென்ற பைக்கும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பிரிதிவிராஜ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
மொபெட்டில் வந்த வானூா் வட்டம் , பெரிய கொழுவாரியைச் சோ்ந்த ரமேஷ்(39) மற்றும் 3 நபா்கள் காயமடைந்தனா். அவா்கள் 4 பேரும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து, வானூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.