படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மாடிப்படியிலிருந்து நிலைத்தடுமாறி விழுந்ததில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் அருகிலுள்ள மண்டவாய்புதுகுப்பம் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ச.மணி (61). இவா் சனிக்கிழமை வீட்டின் மாடிப்படியிலிருந்து கீழே இறங்கிய போது, நிலைத்தடுமாறி விழுந்தாா்.
இதில் காயமடைந்த மணியை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் உயிரிழந்தாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement