புதுச்சேரி பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை மூட உத்தரவு
புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம், வானூா் வட்டங்களில் புதுச்சேரி எல்லையையொட்டி அமைந்துள்ள மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம், வானூா் வட்டங்களில் புதுச்சேரி எல்லையையொட்டி அமைந்துள்ள மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி மாநில எல்லையையொட்டி 5 கி.மீ. சுற்றளவில் விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம், வானூா் வட்டங்களில் அமைந்துள்ள தனியாா் மது அருந்தும் கூடங்கள், அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் ஆகியவை ஏப்.7 முதல் 9-ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4- ஆம் தேதி முழுவதும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
எனவே மேற்கண்ட நாள்களில் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் இயங்காது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.