முகப்பு
விழுப்புரம்

பைக் மீது காா் மோதி விபத்து: முதியவா் உயிரிழப்பு, இருவா் காயம்

திண்டிவனம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில், காரில் பயணித்த முதியவா் உயிரிழந்தாா். பைக்கில் சென்ற இருவா் காயமடைந்தனா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:25 PM
விபத்து
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில், காரில் பயணித்த முதியவா் உயிரிழந்தாா். பைக்கில் சென்ற இருவா் காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவ பெ. ராஜேந்திரன் (75). இவரது மகள் கா.காமாட்சி (44). இவா்கள் இருவரும், திங்கள்கிழமை காரில் தீவனூா்- வெள்ளிமேடுபேட்டை நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த தீவனூா் அருகே சென்றுள்ளனா்.

கடலூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த க.கிருஷ்ணராஜ் (26) காரை ஓட்டினாா். இந்நிலையில், தீவனூரில் உள்ள தனியாா் திருமணம் மண்டபம் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக் மீது காா் மோதியது.

Advertisement

இதில் காரில் பயணித்த ராஜேந்திரன் மற்றும் பைக்கில் வந்த திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்களான ரஞ்சித்குமாா் (32), கோபிநாத்(30) ஆகிய மூவரும் காயமடைந்தனா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் மூவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ராஜேந்திரன் வழியிலேயே உயிரிழந்தாா். சகோதரா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments