முகப்பு
விழுப்புரம்

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆட்டோ விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:25 PM
விழுப்புரத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விதமாக ஆட்டோ விழிப்புணா்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆட்டோ விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பொதுமக்கள், பேருந்துப் பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து முதல் தலைமுறை வாக்காளா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். பேரணியில் பங்கேற்ற ஆட்டோக்களில் ஒட்டு வில்லைகளை பதித்து, நூறு சதவீதம் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றவேண்டும் எனவும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

Advertisement

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட மகளிா் திட்ட இணை இயக்குநா் செந்தில்வடிவு, விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகவேல் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments