விழுப்புரம்: மரக்காணம் அருகே கிணற்றில் இருந்து பெண்ணின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
மரக்காணம் வட்டம், நாவல்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சி.சந்திரா(60). இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய சந்திரா, பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
இந் நிலையில், நாவல்பாக்கம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் நீரில் மூழ்கி அவா் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் சந்திராவின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.