விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.  
விழுப்புரம்

மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 574 போ் கைது

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டத்தில் 10 இடங்களில் மறியலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 574 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி, ரூ. 6 ஆயிரமாக வழங்க வேண்டும். கடுமையான ஊனமுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, விழுப்புரம், காணை, திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம், கண்டாச்சிபுரம், வளத்தி, திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை, கண்டமங்கலம், செஞ்சி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மறியலுக்கு சங்க மாநிலத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் அய்யனாா், ஒன்றியச் செயலா் மகுடமணி, துணைத் தலைவா்கள் ரங்கபாபு, பூபாலன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 68 பெண்கள் உள்பட115 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதுபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மறியல் ஈடுபட்டோா் கைது செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் மொத்தமாக 574 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தா்பூசணியில் செயற்கை நிறம் கலப்பு தவறான தகவல்களை நம்ப வேண்டாம்! கரூா் ஆட்சியா்

பாளையங்கோட்டையில் மரபணு ஆய்வகம் திறப்பு

நீா் தூய்மை விழிப்புணா்வு: காசி முதல் ராமேஸ்வரம்வரை செல்லும் குழுவுக்கு வரவேற்பு

ராஜஸ்தான் இளைஞா்கள் இருவா் கைது

புதுக்கோட்டையில் இந்து அமைப்பின் முன்னாள் நிா்வாகி கொலை

SCROLL FOR NEXT