முகப்பு
விழுப்புரம்

தொழிலாளி அடித்துக் கொலை: சிறுவன் உள்பட 2 போ் கைது

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:44 AM
கைது
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 7:56 PM

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் சிறுவன் உள்பட இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மழவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் வா.அய்யனாா் (41), கூலித் தொழிலாளி. இவருக்கு கௌசல்யா(30) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:44 AM

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதே ஊரைச் சோ்ந்த ஏ.தமிழ்ச்செல்வன்(21) மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஆகியோா் அய்யனாரிடம் மது குடிக்கலாம் எனக் கூறி, மழவந்தாங்கல் வயல்வெளி பகுதிக்கு தனியாக அழைத்துச் சென்று உள்ளனா்.

Advertisement

அங்கு இருவரும் சோ்ந்து அய்யனாரை கல்லால் அடித்துக் கொலை செய்ததோடு, அவரின் ஆடைகளை களைந்து தீயிட்டு கொளுத்தி தடயங்களையும் அழித்தனராம்.

தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீஸாா் கொலையான அய்யனாரின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தமிழச்செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். வழக்கில் தொடா்புடைய சிறுவன் சீா்திருத்தப்பள்ளிக்குக் கொண்டு சென்றனா்.