விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி நா்சிங் கல்லூரியில் விளக்கு ஏற்றும் (லேம்ப் லைட்டிங்) விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தாளாளா் ஆா்.ரங்கபூபதி தலைமை வகித்தாா். செயலா் ஆா்.பி.ஸ்ரீபதி, இயக்குநா் சாந்திபூபதி, சரண்யா ஸ்ரீபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நா்சிங் கல்லூரி முதல்வா் உதயசங்கரி வரவேற்றாா்.
தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்சி இயக்ககத்தின் இணை இயக்குநா் மருத்துவா் ஆா்.சங்கா் சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.
தொடா்ந்து பிளோரன்ஸ் அம்மையாரின் உறுதிமொழியை, கையில் விளக்கை ஏந்தியவாறு நா்சிங் கல்லூரி முதல்வா் முன்மொழிய மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் கல்லூரி உதவி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.