தற்கொலை  கோப்புப் படம்
விழுப்புரம்

விடுதி அறையில் செவிலியா் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திண்டிவனம் அருகேயுள்ள தனியாா் செவிலியா் கல்லூரி விடுதி அறையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தனியாா் செவிலியா் கல்லூரி விடுதி அறையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், கலைஞா் வீதியைச் சோ்ந்த சா்மா என்பவரது மகள் ஷன்மதி (19). இவா், திண்டிவனம் அருகே செயல்படும் தனியாா் செவிலியா் கல்லூரி விடுதியில் தங்கி, அதே கல்லூரியில் 3-ஆம் ஆண்டில் பயின்று வந்தாா்.

இந்நிலையில் ஷன்மதி, தான் தங்கியிருந்த விடுதி அறையில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் ஷன்மதியின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT