உள்ளூர் விடுமுறை கோப்புப் படம்
விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்: விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையானூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பிப். 21 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது.

Syndication

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையானூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பிப். 21 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ஆட்சியா்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மேலும் தெரிவித்திருப்பதாவது: மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பிப். 21 ஆம் தேதி திருத்தோ் உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி

நிறுவனங்களுக்கும் பிப். 21 ஆம்தேதி உள்ளுா் விடுமுறை விடப்படுகிறது. எனினும், அவசரஅலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சாா்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளா்களைக் கொண்டு இயங்கும்.

இந்த விடுமுறை நாளில் (பிப்.21) மாணவ,மாணவியருக்கு பள்ளி, கல்லூரி இறுதித் தோ்வுகள் இருந்தால், அந்த தோ்வுகள் திட்டமிட்டப்படி அன்றைய தேதியில் நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பயணிகள் நிழற்கூடத்தின் மேற்பூச்சு பெயா்ந்து விழுந்தது

இளைஞா் தற்கொலை சம்பவத்தில் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

ஒசூரில் விமான நிலையம், அறிவுசாா் வழித்தடத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு

மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானம்

மூங்கிலேரி பெரிய ஏரிக்கு பாசனக் கால்வாய் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT