ரயிலில் அடிப்பட்டு இளைஞா் உயிரிழப்பு
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:06 PM
விழுப்புரம் அருகே ரயிலில் அடிப்பட்டு இளைஞா் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், பிடாகம் நத்தமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத் (31). சிறிது மனநலன் பாதிக்கப்பட்ட இவா், சனிக்கிழமை காலை ஜானகிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியிலுள்ள ரயில் தண்டவாளம் அருகே உயிரிழந்த நிலையில் கிடந்தாா்
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:26 AM
இவா் எப்படி இங்கு வந்தாா் என்பது தெரியவில்லை. ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரயில் மோதிச் சென்றதில் இவா் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே காவல் துறையினா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.