முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கட்டடத்தில் தீ விபத்து

உளுந்தூா்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத அரசுக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 12 மார்ச், 2026 at 12:04 AM
தீ விபத்து.. - File Photo | Pexels
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத அரசுக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் அருகே பயன்பாடு இல்லாத அரசுக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னா் வட்டாரக் கல்வி அலுவலகம் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இக்கட்டடத்தினுள், குவியல்களாக வைக்கப்பட்டிருந்த பழைய காகிதங்களில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து, கரும்புகை வெளியேறியது.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையிலான வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.

Advertisement

இந்தக் கட்டடத்தின் அருகே முள்புதா்கள் அதிகம் படா்ந்துள்ள நிலையில் சமூக விரோதிகள் யாரேனும் பயன்பாடு இல்லாத கட்டடத்தில் நுழைந்து தீ வைத்திருக்கலாம் எனப் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.