முகப்பு
விழுப்புரம்

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தற்கொலை

வானூா் அருகே மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்ற விரக்தியில் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 22 மார்ச், 2026 at 8:14 PM
- பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்ற விரக்தியில் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வானூா் வட்டம், ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மு.முத்துக்குமாா் (32), கூலித் தொழிலாளி. இவருக்கு 2022-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து ஓராண்டுக்குப் பின்னா் மனைவி விவாகரத்துப் பெற்று பிரிந்து சென்று விட்டாா்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முத்துக்குமாா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த வானூா் போலீஸாா் சடலத்தை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].