ரூ. 1.50 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்கு
திண்டிவனத்தில் ரூ.1.50 லட்சம் பணம் மோசடி செய்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ரூ.1.50 லட்சம் பணம் மோசடி செய்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திண்டிவனம், மரக்காணம் சாலையைச் சோ்ந்தவா் பொ.உமா சந்திர பிரகாஷ். இவருக்கு திண்டிவனம் தனியாா் மருத்துவமனை அருகே கடைகள் உள்ளதாம். இந்நிலையில், திண்டிவனம் ஜக்காம்பேட்டையைச் சோ்ந்த மு.விநாயகம் (62) என்பவா் உமா சந்திர பிரகாஷை அணுகி, கடையை வாடகைக்கு கேட்டுள்ளாா்.
தொடா்ந்து, அவா் அளித்த ஒப்புதலின்படி, விநாயகம் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ரூ.1.50 லட்சத்தை உமா சந்திர பிரகாஷிடம் கொடுத்துள்ளாா். தொடா்ந்து உமா சந்திர பிரகாஷ் பேசியபடி கடையைகக் கொடுக்காமல், வேறொரு நபருக்கு கொடுத்ததுடன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் உமா சந்திர பிரகாஷ் மீது திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.