பொன்பத்தி செம்பாத்தம்மன் கோயில் தேரோட்டம்
பொன்பத்தி கிராமத்தில் உள்ள செம்பாத்தம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், பொன்பத்தி கிராமத்தில் உள்ள செம்பாத்தம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
பொன்பத்தி கிராமத்திலுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருத்தோ் உற்சவ விழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் உற்சவா் வீதியுலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மாலையில் செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், திரௌபதி அம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஊரணி பொங்கல் மற்றும் கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதையடுத்து உற்சவா் செம்பாத்தம்மன், பச்சையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினா். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனா்.
திருவிழாவில் பொன்பத்தி, செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.