மக்களை ஏமாற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை:கருணாநிதி குற்றச்சாட்டு
அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை: அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், அதிமுக காலங்கடந்து தற்போதுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Advertisement
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இலவசங்கள் அனைத்தும் நல்ல எண்ணத்தோடு இடம் பெறவில்லை. மக்களை ஏமாற்றும் நோக்கிலேயே அவை இடம்பெற்றுள்ளன.
மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கையை, அதிமுக `காப்பி' அடித்துவிட்டது என்றார்.