அரசியல் பயில்வோம்!

இன அரசியல்-3: குரோமக்நன் மனிதன்

சி.பி.சரவணன்

க்ரோ-மேக்னன் மனிதன் உடல் நிலை, உடல் அமைப்பு, மூளை அளவு மற்றும் அவர்களின் கலாச்சாரம் இன்றுள்ள மனிதனுக்கு தகுதியானவர் ஆவர். நிண்டேர்தல் மனிதருக்குப் பின் குரோமக்நன் மனிதர் தோன்றினார்கள். இவர்கள் துருவமான மனிதர் (Reindeer man) எனவும் அறியப்படுவர். இவர்கள் நிண்டேர்தல் மக்களை ஈவு இரக்கமின்றி வேட்டையாடிக் கொன்றனர். இவர்கள் ஆசிய நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரையில் பரவி வாழ்ந்தார்கள். இவர்கள் நெட்டையானவர்களாயும், குறைந்த மயிர் அடர்த்தி உடையவர்களாயுமிருந்தனர். இவர்கள் சிறு குடிசைகளில் வாழ்ந்தனர். ஒரு பெரிய குடிசையைச் சுற்றி பல சிறிய குடிசைகள் இருந்தன. குரோமக்நன் மக்கள் குடும்பம் என்னும் சமூக நிலையை அடைந்தனர். இவர்களிலிருந்தே சமூக வாழ்க்கை தோன்றிற்று. குடும்ப நெருப்பைச் சுற்றி குடும்பம் வளர்கின்றது. குடும்பத்திலிருந்தே சமூகம் வளர்ந்ததென்று வரிவளர்ச்சிக் கொள்கை (Evolution theory) கூறுகிறது. மற்றவர்களின் மனத்தோடு பழகுவதால் இவர் மனம் வளர்ச்சியடைகிறது. இவர்கள் பிரிந்து சென்று வௌ;வேறு கூட்டங்களாக வாழ்ந்தபோதும் தாம் எல்லோரும் ஒரு பெரிய கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லி கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று துருவ மான்களை வேட்டையாடினர். துரத்தப்படும் விலங்குகள் எங்குச் சென்றனவோ அங்கெல்லாம் இவர்களும் சென்றார்கள். துருவ மான், காட்டு குதிரை, கஸ்தூரி மாடுகள், மேய்ச்சல் நிலங்களை தேடிச் சென்றபோது இவர்களும் அவைகளை வேட்டையாடும் பொருட்டு அவைகளைப் பின் தொடர்ந்து சென்றனர்.

வரலாறு ஆரம்பிப்பதன் முன் மத்திய ஐரோப்பிய புல்வெளியில் புல் முழங்கால் உயராமாயிருந்தது. அங்கு மேயும் துருவ மான்களும்  காட்டுக் குதிரைகளும் வேட்டைக்காரரை மோப்பம் பிடித்தற்கு அடிக்கடி தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தன. வேட்டைகாரர் தவழ்ந்து அம்பு பாயக்கூடிய அண்மையில் சென்றனர். காட்டின் தொலைவில் ஒரு பக்கத்தில் பெண்கள் நின்றார்கள்.  மூன்று மான்களும் ஒரு குதிரையும் மேலே துள்ளிக் கீழே விழுந்தன. உடனே மற்றைய விலங்குகள் காட்டுக்கு ஊடாகப்பாய்ந்து வேகமா யோடி மறைந்தன. பெண்கள் ஓடி வந்தனர். வேட்டையாடப்பட்ட விலங்குகளைத் தோள்களிலிட்டுச் சுமந்து சென்றனர். இறைச்சி பொரிக்கவோ, சமைக்கவோ அல்லது அவிக்கவோ படவில்லை. அக்காலப் பெண்கள் பானை செய்ய அறிந்திருக்கவில்லை. இப் புல்வெளியில் வேட்டையாடு வோர் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். பின்பு இன்னொரு கூட்டம் விலங்குகள் அவ்விடம் வந்தன. அங்கு மம்மத்து என்னும் யானை வந்து கொண்டிருக்கும் செய்தியை இளைஞன் ஒருவன் வந்து சொன்னான். பின்பு எல்லோரும் சேர்ந்து பொறிக் கிடங்கு ஒன்று தோண்டினார்கள். மம்மத்தின் முன்நின்று அதனை வேட்டையாட அவர்கள் அஞ்சினார்கள். மம்மத்து யானை கூட்டம் வந்தது. அக் கூட்டத்திலுள்ள யானையொன்று கிடங்கின் மேலே பரப்பியிருந்த தடிகள் மீது காலை வைத்தது. அது உடனே குழியில் விழுந்து அகப்பட்டுக் கொண்டது. அது எக்காளமிட்டுச் சத்தஞ் செய்தது. மற்ற யானைகள் அதனை மீட்பதற்குக் குழி அண்டை வந்தன. அவைகளால் அதற்கு உதவி அளிக்க முடியவி;லை. அவைகள் அதனைக் குழுp யிடத்திலேயே விட்டு சென்றன. வேட்டைகாரர் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் குழியை சுற்றி நின்று கூத்தாடினார்கள். விலங்கு இறந்து போகும் வரையில் தமது ஈட்டிகளை அதன் மீது பாய்ச்சினார்கள். ஈட்டிகளை நக்கி இரத்தத்தை சுவைத்தார்கள்.

மக்கள் வேட்டை விலங்குகளோடு வெளியிலேயே வாழ்ந்தார்கள். அங்கும் இங்கும் குகைகள் இருந்தன. இவை நிலையானவும் உறுதியானவும் குடிசைகளாகப்பயன்பட்டன. வேட்டை விலங்குகள் கிடைப்பது அருமையான காலங்களில் வேட்டையாடுவேர் அவைகளில் தங்கியிருந்தார்கள். ஆண்டில் ஒரு முறை அல்லது இரண்டு முறை எல்லோரும் ஓரிடத்தில் கூடினார்கள். இவ்வழக்கம் 40,000 ஆண்டுகளின் முன் தொடங்கியது இது எங்கள் காலம் வரையில் இருந்து வருகின்றது.

நிண்டேர்தல் மனிதனிடத்தில் காணப்படாத பொருள்கள் குரோமக்நன் காணப்படாத மனிதனிடத்தில் இருந்தன. குரோமக்நன் மனிதரிடத்தில் குகைளில் வாழும் கரடி, வாள் போன்ற பல்லுடைய புலிகளை எதிர்த்துப்போராடத்தக்க ஆயுதங்கள் இருந்தன. வில்லையும் அம்பையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். இவர்கள் ஆடை உடுக்கவில்லை தம்மை அழகுபடுத்தும் பொருட்டுத் தோல் அணிந்திருந்தார்கள் இவர்கள் புல்வெளிகளில் வாழ்ந்தார்கள். சிறிது சிறிதாக இவர்களின் எண் குறையத் தொடங்கிற்று.

புதிய கற்கால மக்கள்

குரோமக்நன் மக்கள் மறைந்து ஐயாயிரம் ஆண்டுகளின் பின் புதிய கற்கால மக்கள் தோன்றினார்கள். மக்கள் எழுத்துகளைப் பற்றி அறியுமுன் வரலாறு தோன்றவில்லை கற்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் வைத்து நோக்கும்போது அவர்களின் வரலாறு புலப்படுகின்றது. இம் மக்கள் இருள் அல்லது கபில நிறமுடையவர்களாயிருந்தனர். இவர்கள் உலகம் முழுமையிலும் சென்று பரந்து தங்கி வாழ்ந்தார்கள். வெப்பநிலை, உணவு, பழக்க வழக்கங்கள் சமய வழக்கம்  போன்றவை காலின் வளர்ச்சி தாடை எலும்புகளின் நீளம் உடலின் உயரம் அல்லது குறுக்;கம், மண்டையின் பருமை, பாதத்தின் அளவு போன்ற மாற்றங்களை உண்டு பண்ணின. வாழத் தகுதியுடையவர்கள் நிலை பெற்றார்கள். தகுதியற்றவர் மறைந்து போயினர். தகுதியுடைய ஒர சாதியார் தோன்றும் போது தகுதியற்றவர் மறைந்து போகின்றனர்.

வரலாறு தொடங்கும்போது மங்கிய நிறமுள்ள மக்கள் வட ஆப்பிரிக்கா மத்திய தரைக்கடல் ஓரங்கள்  முதல் இந்தியாவரையில் வாழ்ந்தார்கள். புதிய கற்கால மக்கள் குடிசை கட்டி வாழ்ந்தார்கள். மரங்கள் தோப்புகள் போல் வளர்ந்திருந்தன. சோலைக்கு வெளிப்புறத்தில் நாற்புறத்தும் பயிர் செய்யும் நிலங்கள் இருந்தன. பெண்கள் உணவு தேடும் பொருட்டுக் காட்டுக்குள் வெகுதூரம் சென்று அலையவில்லை. அவர்கள் தானியத்தை நிலத்தில் விதைத்தார்கள். ஆண்டுதோறும் அவை விளைவு அளித்தன. அவர்களின் கணவர் ஓரிடத்தில் தங்கியிருந்தார்கள். வீடு இன்றி அலைந்து திரிந்த அவர்கள் இப்பொழுது வீட்டில் இருந்தார்கள். வீடுகளில் நாய்கள் நின்று குரைத்தன. நாய் அவர்களுக்கு உதவியாக விருந்தது. மாலை நேரத்தில்  ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்தில் நின்றும் ஒட்டிக்கொண்டு வர அது உதவி புரிந்தது. காட்டில் வாழுமு; துவ மான், பன்றி, குதிரை, மாடு, ஆடுகளை அவர்கள் பிடித்துப் பழக்கிஅ வை உணவின் பொருட்டு தம்மிடம் தங்கி வாழும்படி செய்தார்கள். அவர்கள் வேட்டை நாய்களுடன் வேட்டையாடவும் சென்றார்கள். இப்பொழுது வேட்டையாடாமலே உணவு கிடைத்தது. ஆகவே, அவர்கள் வேட்டையாடுவதைப் பொழுது போக்காக மாத்திரம் கொண்டனர்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

SCROLL FOR NEXT