ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு எப்போது அரசு உத்தியோகம் கிடைக்கும்? சொந்தத் தொழில் செய்யலாமா? புத்திர பாக்கியம் எப்போது உண்டாகும்? சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? என் மருமகளுக்கு உத்தியோகம் பார்க்கும் யோகம் உள்ளதா? - வாசகர், நாமக்கல்

DIN

உங்கள் மகனுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து அனுகூலமான தசாபுக்திகள் நடக்கத் தொடங்கும். அந்த காலகட்டத்திலிருந்து உத்தியோகம் நிரந்தரமாகும். சொந்தத் தொழில் செய்ய வேண்டாம். கடைசி வரை உத்தியோகம் பார்க்கவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. நான்காமதிபதியான செவ்வாய்பகவான் குரு ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுவதால் சொந்த வீடு 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமையும். உங்கள் மருமகளுக்கு தற்சமயம் ஏழாமதிபதியான குருபகவானின் தசையில் பாக்கியாதிபதியான சனிபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலைப்பாக்கியம் உண்டாகும். இருவருக்கும் எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT