ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு 63 வயதாகிறது. மூன்று பெண்குழந்தைகள். மூவரும் திருமணமாகி நல்லபடியாக இருக்கிறார்கள். நான் ஜோதிடத்தில் டிப்ளமோ, பி.ஏ., டிகிரி முடித்து எம்.ஏ.,படித்து வருகிறேன். ஜோதிடம் எனக்கு ஏற்றதுறையா? அதன்மூலம் எனக்கு வருவாய் எதிர்பார்க்கலாமா? வாக்குபலிதம் சித்திக்குமா? இறையருள் கிட்டுமா?- சம்பத் குமார், சென்னை

DIN

உங்களுக்கு லக்னாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுகஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கும் ஆறாமதிபதியைப் பார்வை செய்கிறார். பௌர்ணமி யோகம் உண்டாகிறது. சுக பாக்கியாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மேலும் கேதுபகவான் ஆறாம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கிறார். தற்சமயம் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான புதபகவான் தசை நடப்பதால் ஜோதிடத்தை தொழிலாக எடுத்துக்கொள்ளலாம். அதில் ஓரளவு வெற்றியும் பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும். வாக்கு பலிதம் உண்டாகும். ஜோதிட ஆராய்ச்சியை தொடர்ந்து செய்துவரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT