ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு திருமணமாகி விவகாரத்தும் ஆகிவிட்டது. ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஏழில் சூரியன் இருப்பது நல்லதா? மறுமணம் செய்தால் வெற்றியாகுமா? - வாசகி, நாகப்பட்டினம்

DIN

உங்களுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. களத்திர ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் இருப்பது பெரிய பாதிப்பு என்று கூற முடியாது. செவ்வாய்பகவான் லக்னாதிபதியாகி அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்று நவாம்சத்தில் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்தாலும் செவ்வாய்தோஷம் இல்லை. களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். பலரும் மறுமணத்திற்கு ஜாதகம் பார்க்கத் தேவையா என்று கேட்கிறார்கள். மறுமணத்திற்கும் ஜாதகப் பொருத்தம் அவசியம் பார்க்க வேண்டும். குறிப்பாக, லக்னம், குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்களுக்கு ஏற்ற சமதோஷம் பார்க்க வேண்டியது அவசியம் என்பதை உங்கள் மூலமாக அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். மற்றபடி உங்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் மறுமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT