ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகன், மகளுக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. இருவரும் பரிகாரம் செய்ய கோயிலுக்கு வருவதில்லை. திருமணம் எப்போது நடைபெறும்? மகளுக்கு காது கேட்காது. நல்ல வரன் அமைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? இவர்களுக்கு உறவில் திருமணம் அமையுமா? - வாசகி, ஈரோடு

DIN

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், கன்னி ராசி. களத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. லக்னாதிபதியும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. அதோடு அவர்களை குருபகவானும் பார்வை செய்வது சிறப்பு. சிவராஜயோகம், புதாதித்ய யோகம், குருசந்திர யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அந்நிய உறவில் பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி. களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று, குடும்பம், சுகம் மற்றும் ஆறாம் வீடுகளைப் பார்வை செய்கிறார். தற்சமயம் அவருக்கு குருமகா தசையில் லக்னாதிபதியின் புக்தி நடப்பதால் அவருக்கும் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். இருவருக்கும் ஜாதகம் சரியாகவே கணிக்கப்பட்டுள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT