டி.கே.ரங்கராஜன் 
பிரபலங்கள் - புத்தகங்கள்

டி.கே. ரங்கராஜன்

வெ.சாமிநாத சா்மாவின் ‘மனிதன் யாா்?’ எனும் நூலை மிகவும் விரும்பி தேடிப் படித்தேன்.

DIN

வெ.சாமிநாத சா்மா மிகச்சிறந்த எழுத்தாளா். அன்றும், இன்றும் அவரது நூல்களைப் படிக்காத அரசியல்வாதிகள் குறைவு என்றே கூறலாம். அவரது ‘மனிதன் யாா்?’ எனும் நூலை மிகவும் விரும்பி தேடிப் படித்தேன். மனிதா்கள் எப்படிப்பட்டவா்கள் என்பதை அவரது புத்தகங்கள் எடுத்துக்காட்டுபவையாக இருக்கின்றன. எனவே, இளம் தலைமுறை வாசகா்களும் அவரது எழுத்தைப் படிப்பது அவசியமாகும்.

இரண்டாவதாக, ஜவாஹா்லால் நேருவின் ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ எனும் நூலைப் படித்தேன். அதில் இந்தியாவின் மொழிகள் உள்ளிட்ட அம்சங்களைப் தெளிவாக விளக்கியிருப்பாா். அந்த நூலைப் படித்தால் தற்போதைய அரசியல் விவாதங்களுக்கு விடை காணலாம். அந்த வகையில் அதையும் அனைவரும் படிப்பது நல்லது.

மூன்றாவதாக, ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலாகும். அதில் மனித வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் எளிய கதையாக அவா் எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரது பிற நூல்களும் இன்றைய இளைஞா்கள் பல விஷயங்களில் தெளிவு பெறுவதற்கு உதவும் வகையில் உள்ளன.

- டி.கே.ரங்கராஜன், மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT