வர்த்தகம்

சென்ற நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு

DIN

சென்ற நவம்பரில் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.88 சதவீதமாக அதிகரித்தது. எரிபொருள், காய்கறி, முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்ததையடுத்து பணவீக்கம் உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விலை அடிப்படையில் கணக்கிடப்படும் இப்பணவீக்கம் கடந்த ஆண்டு நவம்பரில் 3.63 சதவீதமாகவும், நடப்பு ஆண்டு அக்டோபரில் 3.58 சதவீதமாகவும் காணப்பட்டது. 
இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் பணவீக்கம் அதிகபட்சமாக 5.05 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புரதச் சத்து நிறைந்த முட்டைக்கான பணவீக்கம் நவம்பரில் 7.95 சதவீதமாக அதிகரித்தது. அக்டோபரில் இது 0.69 சதவீதமாக இருந்தது. எரிபொருள்களுக்கான பணவீக்கம் 6.36 சதவீதத்திலிருந்து 7.92 சதவீதமாகவும், காய்கறிகளுக்கான பணவீக்கம் 7.47 சதவீதத்திலிருந்து 22.48 சதவீதமாகவும் அதிகரித்தன.
ஒட்டுமொத்த அளவில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 1.9 சதவீதத்திலிருந்து உயர்ந்து 4.42 சதவீதமானது என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT