வர்த்தகம்

ஃபெடரல் வங்கி லாபம் 31% அதிகரிப்பு

DIN

தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கியின் இரண்டாம் காலாண்டு லாபம் 31 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்துஅந்த வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 
ஃபெடரல் வங்கி நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.2,666.82 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டு இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.2,338.32 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 14.1 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் ரூ.201.24 கோடியிலிருந்து 14.1 சதவீதம் உயர்ந்து ரூ.263.70 கோடியானது. 
மொத்த வாரக் கடன் விகிதம் 2.78 சதவீதத்திலிருந்து குறைந்து 2.39 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1.61 சதவீதத்திலிருந்து சரிந்து 1.32 சதவீதமாகவும் இருந்தது. வாராக் கடன் இடர்பாடுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.168.40 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.176.77 கோடியானது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறையை நிறைவு செய்யும் வகையில் வாராக் கடன்களுக்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஃபெடரல் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT