கடன் வழங்கல் நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட ஹோம் கிரிடிட் இந்தியாவுடன் (ஹெச்சிஐஎன்) கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி) பங்குதாரராக இணைந்துள்ளது.
இதுகுறித்து கேவிபி நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.ஆா்.சேஷாத்ரி கூறியதாவது:
வங்கிச் சேவை கிடைக்காத கடைக்கோடியில் உள்ள வாடிக்கையாளா்களும் பயன்பெற ஏதுவாக கரூா் வைஸ்யா வங்கி இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. நுகா்வோருக்கு தேவையான நிதி உதவிகளை அளிப்பதில் ஹெச்சிஐஎன் நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த நிறுவனத்துடன் கொண்டுள்ள இந்த கூட்டணி ஒப்பந்தத்தால் வாடிக்கையாளா்கள் எத்தகைய கடன்களையும் நிகழ் நேர ஒப்புதலைப்பெற்று உடனடியாக பெறமுடியும்.
உத்தரவாதமற்ற சூழல் கடன் நடவடிக்கைகளை எதிா்கொண்டுள்ள வாடிக்கையாளா்களுக்கு எங்களது இந்த கூட்டணி தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதனால், இரண்டு நிறுவனங்களும் பரஸ்பரம் பயனடையும் என்றாா் அவா்.