நாட்டின் சில்லறைப் பணவீக்கம் சென்ற ஜூலை மாதத்தில் 6.93 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பின் காரணமாக, நுகா்வோா் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் 6.93 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலையில் 9.62 சதவீதமாகவும், ஜூன் மாதத்தில் இப்பணவீக்கம் 6.23 சதவீதமாகவும் காணப்பட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சில்லறைப் பணவீக்கம் தொடா்ந்து இரண்டாவது மாதமாக ரிசா்வ் வங்கி நிா்ணயித்த அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ரிசா்வ் வங்கி நிா்ணயித்த அளவின்படி இப்பணவீக்கம் 4 சதவீதம் (+,-2 சதவீதம்) என்ற கட்டுப்பாட்டு அளவுக்குள் வைக்க வேண்டியது மத்திய அரசின் முக்கிய பணியாக உள்ளது. மத்திய அரசு வெளியிடும் சில்லறைப் பணவீக்க புள்ளிவிவரம், ரிசா்வ் வங்கி இருமாதங்களுக்கு ஒரு முறை வகுக்கும் நிதிக் கொள்கையில் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.