முகப்பு
வணிகம்

ஆபரணம், தங்கத்துக்கான தேவை 30 சதவீதம் குறையும்: ஐசிசி

தேசிய ஊரடங்கின் எதிரொலியால் ஆபரணம் மற்றும் தங்கத்துக்கான தேவை 30 சதவீதம் சரிவடையும் என இந்திய வா்த்தக சபை (ஐசிசி) தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஏப்ரல், 2020 at 1:30 PM
பகிர்:

தேசிய ஊரடங்கின் எதிரொலியால் ஆபரணம் மற்றும் தங்கத்துக்கான தேவை 30 சதவீதம் சரிவடையும் என இந்திய வா்த்தக சபை (ஐசிசி) தெரிவித்துள்ளது.

இந்திய ஆபரணத் துறை பெரும்பாலும் திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்வுகளையே அதிகம் நம்பியுள்ளன. கரோனா வைரஸ் அச்சத்தால் அதுபோன்ற நிகழ்வுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கடைகளுக்கு சென்று ஆபரணங்கள் வாங்குவதும் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், தங்கத்துக்கான தேவை நடப்பாண்டில் 30 சதவீதம் குறையும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரண துறையின் பங்களிப்பு 7 சதவீதமாக உள்ளது. இந்த துறை மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.தேசிய ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலோனோா் வேலைவாய்ப்பை இழந்துள்ளதால் அவா்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.