கூகுள் நிறுவனம் விரைவில் தன்னுடைய புதிய ஆக்கமான பிக்சல் 5ஏ 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் அறிமுகமாக உள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலையை 449 டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.33,430) நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
இதன் உற்பத்தி மேலாளரான பிரைன் ரகோவ்ஸ்கி ' முதல் முறையாக ஏ- தொடரில் பிக்சல் சாதனங்கள் வெளியாகிறது. ஐபி67 தொழில்நுட்பத்துடன் தண்ணீரில் பட்டாலும் ஒன்றும் ஆகாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி சேவையை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம் ' என தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிக்க | இந்தியாவில் விற்பனைக்கு வந்த 'சாம்சங் கேலக்ஸி ஏ03 எஸ்' ஸ்மார்ட்போன்
பிக்சல் 5ஏ 5ஜியின் சிறப்பம்சங்கள் :
* உள்ளக நினைவகம் 6ஜிபியும் கூடுதல் நினைவகம் 128 ஜிபியும் கொண்ட 6.34 இன்ச் அளவுள்ள ஓல்ஈடி திரை அமைப்புடன் ஸ்னாப்டிராகன் 765ஜி ப்ராசசர் அமைப்புடன் 5ஜி இணைய வசதியைக் கொண்டிருக்கிறது. .
* துல்லியமான காட்சிகளைப் படம்பிடிக்கும் வகையில் அல்ட்ரா லென்ஸ்கள் கொண்ட இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் இரவிலும் புகைப்படத்தின் துல்லியம் மாறாமல் எடுக்கலாம்.
* ஒருமுறை சார்ஜ் செய்தால் 48 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு பாட்டரி வசதி .
மேலும் நிறுவனத்தின் தரப்பில் ' பிக்சல் உபயோகிப்பாளர்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் அபாரமான விசுவல் மூலம் விளையாட்டுக்களை விரும்பி விளையாடலாம் . விற்பனைக்கு வரும்போதே வாங்குபவர்களுக்கு மூன்று மாதம் இலவசமாக யூடியூப் ப்ரீமியம் சந்தாவும், கூகுள் பிளே பாஸ் மற்றும் கூகுள் ஒன் வழங்கப்படும் . மேலும் அமெரிக்க பகுதிகளில் இருப்பவர்களுக்கு கூகுள் பை மூலம் இலவசமாக செய்திகளை அனுப்ப , பேசிக்கொள்ள கூகுள் நிறுவனம் அனுமதி அளிக்கும் ' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.