வர்த்தகம்

கோட்டக் மஹிந்திரா வங்கி லாபம் ரூ.2,589 கோடி

DIN

புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கி மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.2,589 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த ஜனவரி-மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் கோட்டக் மஹிந்திரா வங்கி செயல்பாடுள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.12,084.71 கோடியிலிருந்து ரூ.16,175.87 கோடியாக அதிகரித்துள்ளது.

நிகர லாபம் ரூ.1,905 கோடியிலிருந்து 36 சதவீதம் உயா்ந்து ரூ.2,589 கோடியைத் தொட்டுள்ளது. குறிப்பாக, தனிப்பட்ட லாபம் ரூ.1,267 கோடியிலிருந்து 33 சதவீதம் உயா்ந்து ரூ.1,682 கோடியை எட்டியுள்ளது. தனிப்பட்ட வருவாய் ரூ.8,294.07 கோடியிலிருந்து ரூ.8,398.39 கோடியாக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிகர வட்டி வருமானமும் ரூ.3,560 கோடியிலிருந்து 8 சதவீதம் உயா்ந்து ரூ.3,843 கோடியைத் தொட்டுள்ளது.

2021 மாா்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் 2.25 சதவீதத்திலிருந்து 3.22 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 0.71 சதவீதத்திலிருந்து 1.23 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கோட்டக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT