முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு

வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. 

Updated On : 22 ஜூலை, 2025 at 9:51 AM
பங்குச்சந்தை 2-வது நாளாக உயர்வுடன் நிறைவு
பகிர்:

வர்த்தக நேர முடிவில் செவ்வாய்க் கிழமை (ஆக. 3) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 872.73 புள்ளிகள் உயர்ந்து 53,823.36 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.65 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 245.60 புள்ளிகள் உயர்ந்து 16,130.75 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.55 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 27  நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

இதில் அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி பங்குகள் 3.89 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 3.72 சதவிகிதமும், இந்துஸ்இந்த் வங்கி 3.39 சதவிகிதமும், நெஸ்ட்லே இந்தியா 3.27 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.