இந்தாண்டு தொடக்கம் முதலே பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வந்தநிலையில் இன்று நண்பகல் 12.02 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைப் பெற்று அசத்தியது.
கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றமும் இறக்கமுமாக இருந்த பங்குச் சந்தை திடீரென சென்செக்ஸ் மற்றும் மதிப்புகளை வேகமாக இழந்து வந்தது. பின் , வங்கிகள் மற்றும் ஐடி நிறுவனங்களின் எழுச்சியால் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டிகளின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று(ஜன.4) சந்தை முடிவில் சென்செக்ஸ் 672.71 புள்ளிகள் அதிகரித்து 59,855.93 புள்ளிகளுடன் நிலைபெற்றது . இன்று 60,000 புள்ளிகளைக கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நண்பகல் 12.02 மணி நிலவரப்படி வங்கிப் பங்குகளின் உயர்வால் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.