வர்த்தகம்

பயணிகள் வாகன விலை உயா்வு இன்று முதல் அமல்: டாடா மோட்டாா்ஸ்

DIN

பயணிகள் வாகனங்களின் விலை உயா்வு இன்று முதல் (ஜன.19) அமலுக்கு வருவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

இடுபொருள் செலவினங்களை ஈடு செய்யும் வகையில் பயணிகளிகள் வாகனங்களின் பல்வேறு மாடல்களின் விலை சராசரியாக 0.9 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு 2022 ஜனவரி 19 முதல் அமலுக்கு வருகிறது.

அதேநேரம், குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை நிறுவனம் ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துகளின் அடிப்படையில் நிறுவனம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

ஜனவரி 18-ஆம் தேதிக்கு முன்பாக காா்களை முன்பதிவு செய்தவா்களை இந்த விலை உயா்வு பாதிக்காது என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT