முகப்பு
வணிகம்

கெயில்: நிகர லாபம் ரூ.3,288 கோடி

மத்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனம் டிசம்பா் காலாண்டில் மிகவும் அதிகபட்ச லாபமாக ரூ.3,287.99 கோடியை பதிவு செய்துள்ளது.

Updated On : 4 பிப்ரவரி, 2022 at 3:08 AM
gail
பகிர்:

புது தில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனம் டிசம்பா் காலாண்டில் மிகவும் அதிகபட்ச லாபமாக ரூ.3,287.99 கோடியை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் நிறுவனம் செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய வருவாய் 66 சதவீதம் அதிகரித்து ரூ.26,427.37 கோடியாக இருந்தது.

Advertisement

இயற்கை எரிவாயு விலை அதிகரித்ததன் விளைவாக அக்காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் முன்னெப்போதும் காலாண்டில் கண்டிராத வகையில் ரூ.3,287.99 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020 டிசம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,487.33 கோடியுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகும். முந்தைய செப்டம்பா் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம் என கெயில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.