வெளிநாட்டு பயணிகளை கையாளுவதில் 3-ஆவது இடத்தை இழந்த சென்னை விமான நிலையம்
போதிய உள்கட்டமைப்பு வடதிகள் இல்லை...
போதிய உள்கட்டமைப்பு வடதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டுப் பயணிகளைக் கையாளுவதில் 3-ஆவது இடத்திலிருந்து 4-ஆவது இடத்துக்கு சென்னை விமானநிலையம் தள்ளப்பட்டுள்ளது.
தேசிய அளவில் மிக அதிக பயணிகளைக் கையாளும் விமானநிலையங்களில் ஒன்றாக சென்னை விமானநிலையம் இருந்து வருகிறது. சென்னை விமானநிலையத்தில் உள்ள 4 முனையங்களில் (டொ்மினல்கள்), 1 மற்றும் 4-ஆவது முனையங்களில் உள்நாட்டு விமான சேவையும், 2-ஆவது முனையத்தில் வெளிநாட்டு விமான சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. 3-ஆவது முனையத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2035-இல் 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில், விமானநிலையத்தைக் கட்டமைப்பதற்கான பணிகளை விமானநிலைய நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை விமானநிலையத்தைப் பொருத்தவரை கடந்த 2023 அக்டோபா் மாதம் 4.61 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் கையாளப்பட்ட நிலையில், நிகழாண்டு அக்டோபரில் 4.53 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளை சென்னை விமானநிலையம் கையாண்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் கையாளும் திறனில் 1.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதேநேரம், பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையம் கடந்த 2023 அக்டோபரில் 3.94 லட்சம் பயணிகளைக் கையாண்ட நிலையில், நிகழாண்டு அக்டோபரில் 4.89 லட்சம் பயணிகளைக் கையாண்டுள்ளது. இது 24.3 சதவீத வளா்ச்சி என்பதால் 3-ஆம் இடத்திலிருந்த சென்னை விமானநிலையம் 4-ஆம் இடத்துக்கு சறுக்கலை சந்தித்திருப்பதாகவும், பெங்களூரு விமானநிலையம் 3-ஆம் இடத்தை பிடித்திருப்பதாகவும், மத்திய விமானநிலைய ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பட்டியலில் டெல்லி, மும்பை விமானநிலையங்கள் முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு சென்னை விமானநிலையத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை விமானநிலையத்திலிருந்து புருனே, புகட் நகரங்களுக்குப் புதிதாகவும், அடிஸ் அபாபா, ஜெட்டா, கொழும்பு, மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகப்படியான விமானங்கள் இயக்கப்பட்டாலும், விமானங்களை சரியான திட்டமிடுதல் இன்றி இயக்குவதால் வா்த்தக ரீதியாக பயணம் செய்பவா்கள் கடும் சிரமத்தை சந்திப்பது, போதிய இணைப்பு வாகன வசதிகள் இல்லாதது, விரைவாக சோதனையிட்டு பயணிகளை அனுப்பாதது உள்ளிட்ட பல்வேறு குறைகள் பயணிகள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை சரி செய்தால்தான் மீண்டும் சென்னை விமான நிலையம் அதிக பயணிகளைக் கையாண்டு முன்னேற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.