சினிமா

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் முதல் ஆளாக இணைந்த டிடி!

மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா என இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவில் தனக்கு வழங்கப்பட்ட...

எழில்

மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் நாகா என இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவில் தனக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை வைத்து கலாம் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ். இவருடைய அறக்கட்டளையில் பிரபல தொகுப்பாளர் டிடியும் இணைந்துள்ளார்.

‘ரசிகர்கள் தரும் பணத்தை அவர்களுக்கு திருப்பி தருகிறேன். எனக்கு முன் பணமாக கிடைத்த ஒரு கோடி ரூபாயை வைத்து கலாமின் காலச்சுவட்டில் என்கிற அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளேன். இதன் மூலமாக 100 இளைஞர்களின் படிப்புக்கு உதவப் போகிறேன். நூறு இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களிடம் ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்துவிடுவேன். அவர்கள் யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உதவலாம் என்று விழாவில் கூறினார் லாரன்ஸ்.

அப்போது அந்த நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொண்டிருந்த பிரபல தொகுப்பாளர் டிடி, அந்த நூறு பேரில் ஒருவராகத் தன்னைத் தேர்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதை லாரன்ஸும் ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து ட்விட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் டிடி. பள்ளிக் கட்டணம் செலுத்தமுடியாத மாணவர் யாராவது இருந்தால் தெரியப்படுத்தவும், லாரன்ஸின் கலாம் அறக்கட்டளை வழியாக அவர்களுக்கு உதவி அளிக்கப்படும். லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு அளித்த பணியை நான் ஆரம்பித்துவிட்டேன். அவருக்கு என் நன்றிகள் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

SCROLL FOR NEXT