சினிமா

தனுஷின் மாரி படத்துக்கு அமோக வசூல்! கொண்டாட்டத்தில் படக்குழு!

இதைத் தொடர்ந்து முதல்நாளே படத்தின் வெற்றியை படக்குழுவினரோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார் தனுஷ்....

எழில்

மாரி படத்துக்குச் சாதகமான விமரிசனங்கள் வராமல் இருக்கலாம். ஆனால், வசூலில் தனுஷுக்கும் தயாரிப்பாளர்களும் அதிக சந்தோஷம் கிடைத்துள்ளது.

கடந்த வெள்ளியன்று ரிலீஸான மாரி, முதல்நாளிலேயே தனுஷுக்குப் பெருமை சேர்த்துவிட்டது. முதல் நாளன்று கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. இதுவரை வெளியான எந்த ஒரு தனுஷ் படமும் முதல் நாளில் இந்த வசூலைப் பெற்றதில்லை. இதைத் தொடர்ந்து இந்தச் செய்தியைக் கொண்டாடும் விதமாக, படக்குழுவினரோடு இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார் தனுஷ்.

'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கியுள்ள மூன்றாவது படம் 'மாரி'. இதில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு; அனிருத் இசை. சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

முதல் மூன்று நாள்களில் ரூ. 20 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது. வெளிநாட்டில் மட்டும் ரூ. 10 கோடி! இதுவும் தனுஷ் படங்களில் ஒரு சாதனையாக உள்ளது.

ட்விட்டர் வழியாக, தனக்கு அதிக ஓபனிங் அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ். தயாரிப்பாளர்களில் ஒருவரான சரத்குமாரும் தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார். படத்தில் பணியாற்றிய முக்கியமான கலைஞர்களுக்குத் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்துள்ளார் தனுஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT