காக்கா முட்டை படத்தின் மீது வழக்கு: தனுஷ், இயக்குநர் மணிகண்டன் நேரில் ஆஜராக உத்தரவு
காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர்களை அவதூறாகப் பேசியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர்களை அவதூறாகப் பேசியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காக்கா முட்டை படத்தில், வழக்கறிஞர் தொழிலை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் மணிவண்ணன், சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி முருகன், காக்கா முட்டை திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ்-வெற்றிமாறன், இயக்குநர் மணிகண்டன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஆகஸ்ட் 6-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
Advertisement