‘தனி ஒருவன்’ ஹிட் ஆனது எப்படி? இயக்குநர் விளக்கம்
முதல் காட்சியில் ஓரளவுதான் கூட்டம் இருந்தது. ஆனால் படம் பார்த்தவர்கள் வெளியே போய் நல்லவிதமாக சொல்லியதால்...
தனி ஒருவன் படம் ஹிட் ஆனது எப்படி என அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
ரசிகர்கள் ஒவ்வொரு காட்சிகளையும் எப்படி ரசிப்பார்கள் என்றெண்ணியபடிதான் கதையை அமைத்தேன். படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே படம் ஹிட் எனத் தெரிந்துவிட்டது. அந்தளவுக்கு வரவேற்பு கொடுத்தார்கள். டிரெய்லர், விளம்பரம் பார்த்துதான் முதல் காட்சிக்கு ரசிகர்கள் வந்தார்கள். முதல் காட்சியில் ஓரளவுதான் கூட்டம் இருந்தது. ஆனால் படம் பார்த்தவர்கள் வெளியே போய் நல்லவிதமாக சொல்லியதால் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதை முதல்நாளின் 2வது, 3வது காட்சிகளிலேயே காணமுடிந்தது. ரசிகர்களின் நல்லவிதமான விமரிசனங்கள்தான் படத்தை ஹிட் ஆக்கியுள்ளது. அதற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
Advertisement