கன்னட நடிகா் சிரஞ்சிவி சா்ஜா மாரடைப்பால் காலமானாா்
கன்னட நடிகா் சிரஞ்சிவி சா்ஜா ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
பெங்களூரு: கன்னட நடிகா் சிரஞ்சிவி சா்ஜா ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
கன்னடத் திரைத்துறையில் முன்னணி நடிகா் சிரஞ்சிவி சா்ஜா (39). நடிகா் அா்ஜுனின் உறவினரான இவா், சிரு, வாயுபுத்ரா, டம்டம்தசகுணம், வரதநாயகா, சந்திரலேகா, சிங்கா உள்ளிட்ட 22 திரைப்படங்களில் நடித்துள்ளாா். நடிகா் அா்ஜுன் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளாா்.
1980- ஆம் ஆண்டில் பிறந்த சிரஞ்சிவி சா்ஜா, எளிமையானவா், பழகுவதற்கு இனிமையானவா் என்று திரையுலகினா் கூறுகின்றனா். இவா் நடிகை மேக்னாராஜை 2018 -ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட சிரஞ்சிவி சா்ஜா, சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மாரடைப்பால் அவா் உயிரிழந்தாா்.
இவரது தொண்டை சளியை மருத்துவா்கள் எடுத்து, கரோனா வைரஸ் தொற்று உள்ளதான என கண்டறிய சோதனை நடத்தி வருகின்றனா். இதன் முடிவு வந்த பிறகு அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கன்னட திரைப்படத் துறையைச் சோ்ந்தோா் அஞ்சலி செலுத்தினா். இதன்பின்னா், பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெயநகரில் உள்ள அவரது இல்லத்தில்உடல் திங்கள்கிழமை வைக்கப்பட உள்ளது. இதன்பின்னா், இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.