சினிமா

நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன்: ஷ்ரேயா கோஷால் உருக்கமான பதிவு!

நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன் - ஷ்ரேயா கோஷால்

இணையதளச் செய்திப் பிரிவு

நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன் என்று பாடகி ஷ்ரேயா கோஷால் உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார். வட இந்தியாவில் பிரபல பாடகராகப் புகழ்பெற்ற ஜுபீன் கர்க் காலமானார். அவரது உயிர் சனிக்கிழமை(செப். 20) பிரிந்தது.

இந்த நிலையில், அவரை நினைவுகூர்ந்து ஷ்ரேயா கோஷால் தெரிவித்திருப்பதாவது: “ஜுபீன் கர்க் நமது நாட்டின் ஒரு தனித்துவமான கலைஞர்; ஒரு மெகா ஸ்டார்; ஒரு நல்ல மனிதர். அவருடைய கலைத்திறமைக்கு, அவரது குரல் வளத்துக்கு நான் எப்போதுமே ஒரு ரசிகை.

அவருடன் சேர்ந்து அஸ்ஸாமிய பாடல்கள் சிலவற்றில் பணியாற்றும் மாபெரும் பாக்கியம் எனக்கு கிட்டியது. ஜுபீன் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று வருத்தத்துடன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அஸ்ஸாமின் ஜுபீன் கர்க் வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக அஸ்ஸாமி மொழியில் பாடல்கள் பல பாடி அங்குள்ள மக்களிடம் நன்கு பரிச்சயமானவரானார். இந்த நிலையில், அன்னாரது மறைவையொட்டி அஸ்ஸாமில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது.

Assam declares three-day State mourning over singer Zubeen Garg's death - singer Zubeen Garg's death shreya ghoshal condolences

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT