முகப்பு
செய்திகள்

சிவகார்த்தியேனின் புதிய அம்மாவாக ரோகிணி!

நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக பிரபல நடிகை ரோஹிணி  நடிக்க உள்ளார்.  

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:52 AM
பகிர்:

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு அம்மாவாக பிரபல நடிகை ரோஹிணி  நடிக்க உள்ளார்.  

ரெமோ படத்தினைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக மோகன் ராஜா இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி நயன்தாரா. இந்த  படத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பிரபல நடிகை ரோகிணி ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →