செய்திகள்

சத்ரியன் பட இயக்குநர் கே. சுபாஷ் காலமானார்! (படங்கள்)

DIN

சத்ரியன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கே. சுபாஷ் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

சிறுநீரகக் கோளாறு தொடர்பாக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.   

1988-ல் கலியுகம் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைந்த சுபாஷ், உத்தம புருஷன், சத்ரியன், பிரம்மா, பங்காளி உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களை இயக்கினார். நாயகன் படத்தில் மணிரத்னத்தின் உதவியாளராக பணிபுரிந்தார். கடந்த சில வருடங்களாக பாலிவுட்டில் திரைக்கதையாசிரியாகப் பணியாற்றினார். சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 3 போன்ற ஹிந்திப் படங்களின் கதை உருவாக்கத்தில் பணியாற்றியுள்ளார்.  

சுபாஷின் மறைவுக்குத் திரையுலக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT