செய்திகள்

இன்று 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ள பாகுபலி 1

எழில்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணா போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ ஏப்ரல் 28 அன்று வெளிவருகிறது. 

இந்நிலையில் அதற்கு முன்பு பாகுபலி 1 படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளார்கள். இன்று இந்தியாவில் பாகுபலி 1, ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் இப்படத்தை இயக்குநர் கரண் ஜோஹர் வெளியிடுகிறார். 

ஒரு படம் மீண்டும் வெளியாகும்போது அதிகபட்சமாக 100 திரையரங்குகள் கிடைத்தாலே பெரிய விஷயம். ஆனால் இந்தப் படம் 1000 திரையரங்குகளில் வெளியாவது இதுவரை இந்திய சினிமா காணாத ஒரு சாதனை என்றே அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT