செய்திகள்

இயக்குநர் சுசீந்திரன் படம் நெஞ்சில் துணிவிருந்தால் எனப் பெயர் மாற்றம்!

எழில்

சுந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் படம் - அறம் செய்து பழகு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு, நெஞ்சில் துணிவிருந்தால் என்று மாற்றப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுசீந்திரன் விளக்கம் அளித்ததாவது: மதுரையை சேர்ந்த ஒரு மருத்துவமனை தன்னுடைய சமூகசேவை தொடர்புடைய பணிகளுக்கு அறம் செய்து பழகு என்கிற தலைப்பைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் பேசினோம். ஆனால் அந்தத் தலைப்பைப் பயன்படுத்துவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். எனவே நெஞ்சில் துணிவிருந்தால் என்று தலைப்பை மாற்றியுள்ளோம். கதைக்கும் இதுதான் சரியாக உள்ளது என்று கூறியுள்ளார். 

இதுதவிர புதுமுகங்களைக் கொண்டு நகரம் சார்ந்த ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் சுசீந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT