முகப்பு
செய்திகள்

நல்ல படங்கள் கிடைப்பது கடினம்: நடிகை தாப்சி

வை ராஜா வை படத்துக்குப் பிறகு தாப்சி நடித்து எந்தவொரு தமிழ்ப் படமும் வெளிவரவில்லை.

Updated On : 17 பிப்ரவரி, 2017 at 12:59 PM
பகிர்:

ஆடுகளம் படம் மூலமாக கவனம் பெற்ற நடிகை தாப்சியின் நடிப்பில் இந்த வருடம் நான்கு ஹிந்திப் படங்கள் வெளிவரவுள்ளன.

வை ராஜா வை படத்துக்குப் பிறகு தாப்சி நடித்து எந்தவொரு தமிழ்ப் படமும் வெளிவரவில்லை. ஆனால் அவர் ஹிந்தி, தெலுங்குப் படங்களில் மும்முரமாக உள்ளார். அவர் நடித்த ரன்னிங் ஷாதி இன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது: 

நல்ல படங்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே என்னுடைய இந்த நல்ல படங்கள் வெளியாவதில் ஆவலாக உள்ளேன். ரன்னிங் ஷாதி படத்தினால் தான் எனக்கு பிங்க் பட வாய்ப்பு கிடைத்தது. எனவே மக்களின் எண்ணங்களை அறிய ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.